;
Athirady Tamil News

லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீ விபத்து : மூன்று வீடுகள் முற்றாக சேதம்

0

லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பம்பரகெலே பகுதியில் இராணிவத்தை தோட்ட வீடுகளில் நேற்றைய தினம் (04) தீ பரவியுள்ளது.

இந்நிலையில், அந்த வரிசையில் இருந்த மூன்று வீடுகள் முற்றாக எரிந்து நாசமகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில்,

பின்ணனி
“ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ மூன்று வீடுகளுக்கு பரவியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரின் தனிப்பட்ட உடமைகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு, தோட்ட நிர்வாகத்தினர் இடம்பெயர்ந்தவர்களை அப்பகுதியிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என சந்தேகிக்கப்படுவதோடு, தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தோட்ட வீடு வரிசையில் சுமார் 10 வீடுகள் உள்ளதோடு, பரவி வந்த தீயை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் லிந்துலை காவல்துறை உத்தியோகத்தர்கள் இணைந்து கட்டுப்படுத்தியதன் மூலம் ஏனைய வீடுகளுக்கும் தீ பரவுவதை கட்டுப்படுத்த முடிந்ததாக லிந்துலை காவல் நிலைய கட்டளைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.