;
Athirady Tamil News

வேகமாக அதிகரிக்கும் மரக்கறி விலை : நுகர்வோர் அதிருப்தி

0

நாட்டில் நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மீன் சந்தையில் மொத்த விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மரக்கறிகளின் விலை
இதேவேளை பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று (04) காலை மரக்கறிகளின் மொத்த விலை உயர்வாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கரட் கிலோ ஒன்றுக்கு 750 ரூபாவாகவும், போஞ்சி 500 ரூபாவாகவும், வெண்டைக்காய் 250 ரூபாவாகவும், கறி மிளகாய் 700 ரூபாவாகவும், கோவா ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

அதேபோல், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் கரட், மீன் மிளகாய், கத்தரிக்காய், போஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய மரக்கறிகளின் விலை ஒரு கிலோகிராமிற்கு 900 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிக விலைக்கு விற்கப்பட்ட மரக்கறிகளின் விலையை நேற்று சில வியாபாரிகள் காட்சிப்படுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

நுகேகொட வாரச் சந்தையில் ஒரு கிலோ மீன் மற்றும் மிளகாய் 1,000 ரூபாவிற்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,600 ரூபாவிற்கும், கரட், போஞ்சி மற்றும் தக்காளி 800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார மத்திய நிலையங்களில்
இதேவேளை, கொழும்புக்கு மரக்கறிகள் கொண்டுவரப்படும் தம்புள்ளை, தம்புத்தேகம, கப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

மழையால் பயிர்கள் அழிந்து வருவதே இந்த விலை உயர்விற்கு காரணம் என விவசாயிகள் குறிப்பிட்டதுடன் குறைந்த விலையில் காய்கறிகள் கொண்டு வந்தாலும், பொருளாதார மையங்களில் உரிய விலை கிடைப்பதில்லை என தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் பல்பொருள் அங்காடிகளில் மரக்கறிகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஒரு கிலோ கரட் 1,000 ரூபா, இஞ்சி1,900ரூபா , பச்சை மிளகாய் 1,800 ரூபா, கறி மிளகாய் 900 ரூபா, தக்காளி 900 ரூபா, கத்தரிக்காய் 800 ரூபா, வெண்டைக்காய் 560 ரூபா என பதிவாகியிருந்தது.

எனினும், சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் தமக்கு உரிய பலன் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மரக்கறிகளின் விலைகள் மட்டுமன்றி மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.