;
Athirady Tamil News

பழனிசாமியே பதவியை ராஜினாமா செய்யணும்…இல்லனா..!! எச்சரிக்கும் ஓபிஎஸ்

0

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பேசியுள்ளார்.

ஓபிஎஸ் பேச்சு
நடைபெற்ற திருச்சி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், நிர்வாகிகளிடம் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என தெரிவித்து, அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்களும், எடப்பாடி தரப்பில் உள்ளவர்களும் என்னிடம் பேசிவருகின்றனர் என குறிப்பிட்டார்.

இல்லையென்றால்…
தொடர்ந்து பேசிய அவர், பழனிச்சாமி தாமாகவே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவர், இல்லையெனில் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் ராஜினாமா செய்ய வைப்பர் என எச்சரித்தார்.

அனைவரும் இணைந்தால்தான் அதிமுக வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது என சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், இணைந்தால் நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டிலும் வெற்றி பெரும் சூழல் உள்ளது என்று கூறி, இதை தடுப்பது யாரென்பது தொண்டர்களுக்கே வெளிச்சம் என சாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.