;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் ஒரு முருங்கைக்காய் விலை இவ்வளவா! அதிர்ச்சியில் பெண்கள்

0

இலங்கை சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பினால் யாழ்ப்பாண வாரச் சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாலும், முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விலைகளின்படி யாழில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1,000 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் மொத்த விலை 2,500 ரூபாவாக காணப்பட்டதுடன், யாழிலிருந்து பல மாகாணங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக உள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் எனைய மரக்கறிகளின் விலைகளும் பாரிய அளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.