;
Athirady Tamil News

2016 இல் மாயமான விமானம் : சென்னை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள்

0

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரிற்கு சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது காணாமல் போனது.

அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் வரைபடமானது பார்வையில் இருந்து மறைந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

விமானத்தின் பாகங்கள்
சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் ‘சோனார்’ தொழில்நுட்பம் மூலம் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதனைப் படம் பிடித்து புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானப்படைக்கு அந்த படங்கள் சென்றுள்ளன. அதன் பிறகு அது மாயமான An-32 விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரையில் இருந்து 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் An-32 விமானத்தின் பாகங்கள் இருந்துள்ளன.

இராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தல்
கடந்த 2016, ஜூலை 22ஆம் திகதி இந்த விமானம் மாயமானது. அதில் சுமார் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு உலக நாடுகள் தங்களது இராணுவ பயன்பாட்டுக்காக இந்த விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏவியன்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.

கடந்த 1980 முதல் 2012 வரை இந்த விமானம் தயாரிக்கப்பட்டது எனவும் இரட்டை இயந்திரம் கொண்ட இந்த விமானம் மோசமான வானிலையிலும் இயங்கக் கூடிய தன்மை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.