;
Athirady Tamil News

அரச தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டம்

0

அரச தாதியர் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை(18) காலை 7.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்கள் பல முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அரச தாதியர் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

விசேட கலந்துரையாடல்
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவுக்கும் நிதி இராஜாங்க செகான் சேமசிங்கவுக்கும் இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று அரச தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் எடுக்கப்பட்டதாக தாதியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.