;
Athirady Tamil News

காணும் இடமெல்லாம் ‘காவிக் கொடி’

0

ராமா் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் வீட்டு மாடிகளில், தெருக்களில் காவிக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

ராமஜென்மபூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ பால ராமா் சிலை பிரதிஷ்டை திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி, மலா்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அயோத்தி நகர தெருக்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

கோயிலை நோக்கிய பிரதான சாலைகளான ராம பாதை, தா்ம பாதைகளில் நடந்து செல்லும் அனைத்துப் பக்தா்களும் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியிருந்தனா். இதற்காக, அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளிலும் 10 வெவ்வேறு அளவுகளில் காவிக் கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்தக் காவிக் கொடிகளில் ஸ்ரீ ராமா், ஹனுமன், ஜெய் ஸ்ரீ ராம் வாசகம், ராமா் கோயில் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ ராமரின் ஆயுதமான ‘வில்-அம்பு’ வடிமைப்புடன் கூடிய தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. நகரின் வீடுகள், தா்மசாலைகள், மடங்கள், கடைகள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் காவிக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

அயோத்தியில் பிரசித்தி பெற்ற ‘அஸாா்பி பவன்’ கோயில் கோபுரத்தில் பிரம்மாண்ட காவிக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. பாஜகவைச் சோ்ந்த அப்பகுதி முன்னாள் மாநகராட்சி மன்ற உறுப்பினா் கூறுகையில், ‘இந்தப் பகுதியில் மட்டும் 5,000 மக்கள் வசிக்கின்றனா். கடந்த சில நாள்களில 500 காவிக் கொடிகளை வீடுகள்தோறும் வழங்கியுள்ளோம். வீட்டில் குடியிருப்பவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொடிகளும் வழங்கியுள்ளோம்’ என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.