;
Athirady Tamil News

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

0

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்றைய தினம் (22-01-2024) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கூடவுள்ளது.

இதன்போது, இலங்கை மின்சார சபையினால் (CEB) முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட மின் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளது.

குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணைக்குழு தனது கருத்துக்களைச் சேர்க்கும். பின் 3 வாரங்களுக்கு பிரேரணை பகிரங்கப்படுத்தப்படும்.

அதன்பிறகு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். அதன் பின்னர் அனைத்து முன்மொழிவுகளையும் இணைத்து புதிய பிரேரணை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.