;
Athirady Tamil News

இலங்கையில் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ள தொடர் படுகொலைகள்

0

இலங்கையில் கடந்த பத்து நாட்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்குவாதத்தால் 03 கொலைகளும், 02 மரணங்களும் சந்தேகத்திற்குரிய முறையில் பதிவாகியுள்ளன.

கடந்த 15ஆம் திகதி கொழும்பு ரண்தெனிய அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 40 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூடு
அத்துடன், கடந்த 20ஆம் திகதி தெலிஜ்ஜவில பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஜீப்பில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.