;
Athirady Tamil News

யாழில். அதீத போதைப்பொருள் நுகர்வால் இளைஞன் உயிரிழப்பு

0

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான இளைஞன் அதீத போதைப்பொருள் பாவனையாலையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் தொடர்பான வழக்கொன்றில் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த 26ஆம் திகதி விடுதலையான இளைஞன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு , வீட்டில் மூர்ச்சையற்று காணப்பட்டதை அடுத்து ,வீட்டார் இளைஞனை வைத்தியசாலைக் கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதீத அளவில் போதைப்பொருளை நுகர்ந்தமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.