;
Athirady Tamil News

உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி ஆரம்பம்

0

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று (1.2.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம்
விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணமே இம்முறையும் வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

உயர்தர பரீட்சையானது ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி நடைபெற்றதுடன், இம்முறை 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.