;
Athirady Tamil News

பிரான்ஸ் பரிசில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல் சம்பவம்!

0

பிரான்ஸ் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீது தாக்குதல்
கத்தி மற்றும் சுத்தியலுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

புகையிரதபாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்குதலை மேற்கொண்டநபரை தடுத்து நிறுத்திய நிலையில், தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதோடு இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் போல தோன்றவில்லை சந்தேக நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தாங்கமுடியாத சம்பவம் இதுவென தெரிவித்துள்ள பிரான்சின் உள்துறை அமைச்சர் சந்தேகநபரை தடுத்துநிறுத்தியவர்களை பாராட்டியுள்ளார். பிரான்ஸ் ஒலிம்பிக்போட்டிகளிற்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.