;
Athirady Tamil News

ஐயப்ப பக்தருக்கு கேரள லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரான புதுச்சேரி பக்தர்

0

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற நபருக்கு 20 கோடி ரூபாய் லொட்டரி பரிசு கிடைத்துள்ளது.

ஐயப்ப பக்தருக்கு அடித்த அதிர்ஷ்டம்
கேரள மாநில அரசு தன்னுடைய லொட்டரித்துறை மூலம் தொடர்ச்சியாக லொட்டரி குலுக்கல்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான லொட்டரி டிக்கெட்டுகள் கேரளாவில் விற்பனையாகியுள்ளது.

அதே சமயம் சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் சிலர் லொட்டரி டிக்கெட்டை வாங்கி சென்றுள்ளனர்.

இதற்கான லொட்டரி குலுக்கல் கடந்த 24ம் திகதி நடைபெற்றுள்ளது, அதில் XC224091 என்ற லொட்டரி சீட்டிற்கு முதல் பரிசான ரூ.20 கோடி கிடைத்துள்ளது.

அதிர்ஷ்டசாலி யார்?
இந்நிலையில் ரூ.20 கோடி மதிப்புள்ள லொட்டரி பரிசை வென்றவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கேரளாவில் உள்ள ஐயப்ப சாமியை தரிசனம் செய்வதற்காக சென்ற புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவருக்கு இந்த லொட்டரி ஜாக்பாஅட் ஆனது அடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு ரூ.20 கோடியில் வரி பிடித்தம் போக ரூ.12.60 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.