;
Athirady Tamil News

அம்பாறை மாவட்ட சுதந்திர விழா

0

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு பூராகவும் இன்றைய தினம் (4) நடைபெற்று வருகின்றன.

76வது சுதந்திர விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தலைமையில் நடைபெற்றது.இதன்போது பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்களின் ஆசியுரைகள் நடைபெற்று அரசாங்க அதிபரின் பிரதான உரையையடுத்து இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை பொலிஸ், இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கலை நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.