;
Athirady Tamil News

யாழில் நடைபெற்ற தொல்லியல் திணைக்களத்தின் பயிற்சி பட்டறை

0

தொல்லியல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய தமிழ் கலாசாரம் தொடர்பான விரிவுரை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கோட்டையில் நேற்றைய தினம் புதன்கிழமை (14.02.2024) இடம்பெற்றுள்ளது.

மேலும், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர் பா.கபிலன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளதோடு வளவாளராக கலாசார திணைக்கள உத்தியோகத்தர் மார்க்கண்டு அருட்செல்வன் பங்குபற்றியுள்ளார்.

நலன் விரும்பிகள்
அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இதன்போது பங்கேற்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.