;
Athirady Tamil News

கனடாவிற்கு குடியேறியவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

கனடாவில் போலி சட்டத்தரணிகள் தொடர்பில் மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் நகரிற்குள் புதிதாக பிரவேசிப்போருக்கு உதவுவதாக கூறி அவர்களிடம் மோசடி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கனடாவில் குடியேறும் எண்ணத்தில் வருகை தரும் குடியேறிகளை இலக்கு வைத்து சட்டவிரோத சட்டத்தரணி கும்பல்கள் இயங்குவதாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த போலி சட்டத்தரணிகள் குடியேறிகளை சந்தித்து சில ஆவணங்களை செய்ய வேண்டியிருப்பதாக கூறி பணம் பெற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.