;
Athirady Tamil News

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சிக்கல்: இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் சேவைகளை வழங்குவதில் ஹோட்டல் நிர்வாகம் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சேவை தொடக்கம் சமையல் அறை வரை அனைத்துத் திணைக்களத்திலும் பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை எனவும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் முதலீட்டுச் சபைக்கு அறிவித்துள்ளது.

நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு ஹோட்டல்களில் வேலைக்காக வெளியேறியதாலும், ஹோட்டல் பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு விடுதிகளில் வேலை தேடுவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு தீர்வாக, ஹோட்டல் சேவையில் பயிற்சி பெற்ற இளைஞர்களை விரைவில் நட்சத்திர ஹோட்டல்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.