;
Athirady Tamil News

கனடாவிலிருந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்கான முக்கிய அறிவித்தல்

0

கனடாவிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை அந்நாட்டின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் திரேசா டேம் விடுத்துள்ளார்.

இதன்படி கனடாவை விட்டு வெளியேறுவோர் குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோர் தட்டம்மை தடுப்பூசிகள் இரண்டு ஏற்றிக் கொண்டதனை உறுதி செய்ய வேண்டுமென டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர்
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் ஊடாக நாட்டிற்குள் தட்டம்மை நோய் பரவுகை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொண்டிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் தட்டம்மை நோய்
கனடாவில் தட்டம்மை நோய் அதிகளவில் பரவாத போதிலும் நோய்த் தொற்று பரவும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.