;
Athirady Tamil News

மூடப்படவுள்ள இலங்கை கோள்மண்டலம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

0

இலங்கை கோள்மண்டலம் நாளை முதல் சில நாட்களுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (27 ஆம் திகதி) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோள் மண்டலம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு
அத்தோடு, அன்றைய தினங்களில் பொதுக் கண்காட்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோள்மண்டலத்தின் புரொஜெக்டர்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.