;
Athirady Tamil News

கொள்ளைகும்பலின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓடிய பொலிஸ் அதிகாரி!

0

மரண அச்சுறுத்தல் காரணமாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

மரண அச்சுறுத்தல்
தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாகவே தான் வெளிநாடு சென்றதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளாார்.

அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களில் கஞ்சிபான இம்ரானும் ஒருவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மரண அச்சுறுத்தல் தொடர்பான ஒலி நாடாக்கள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன எனக் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.