;
Athirady Tamil News

மட்டக்களப்பு போரதீவுப்பற்று நீர் குழியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள காந்திபுரம் பகுதியின் நீர் குழி ஒன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது, இன்று (29-02-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில,

சம்பவ இடத்தில் உள்ள வாழைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக தோண்டப்பட்டுள்ள குழியில் நபர் ஒருவரின் சடலத்தை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து, குற்றத் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பிரதேத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, உயிரிழந்த நபர் போரதீவுப்பற்று காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த 65 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான முருகேசு சிவபாதம் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.