;
Athirady Tamil News

ரஷ்யாவில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

0

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (02.003.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ரஷ்யாவின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கட்டிடத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சு
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதுவரை கருத்து வெளியிடவில்லை.

மேலும், இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அமைச்சர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.