;
Athirady Tamil News

புதிய பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

யுக்திய தேடுதல் நடவடிக்கை மிகவும் திறமையாகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் தலதா மாளிகையில் நேற்று(02) தரிசனம் செய்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயல்
இது தொடர்பில் மேலும் கூறுகையில், சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவாளிகள் மற்றும் ஆட்கடத்தல்காரர்கள் உட்பட பாதாள உலக குழுவினர் முழுமையாக ஒடுக்கபடுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.