;
Athirady Tamil News

அத்திவாரம் வெட்டும் போது மீட்கப்பட்ட கைக்குண்டு! யாழில் பரபரப்பு

0

யாழ்ப்பாணத்தில் கட்டடம் அமைப்பதற்கு இன்று கிடங்கு வெட்டியபோது கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெரும் பரபரப்பு
இதற்கமைய நிலத்தைத் தோண்டியபோது நிலத்தின் கீழ் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், குண்டுகள் ஏதும் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக நிலத்தைத் தோண்டும் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரிப் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.