;
Athirady Tamil News

கருக்கலைப்பிற்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ் நாடாளுமன்றம்

0

பிரான்சில் கருக்கலைப்பை அரசியலமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும் வகையில் பிரான்ஸ் அரசியலமைப்பின் பிரிவு 38இல் திருத்தம் கொண்டுவரும் சட்டமூலம் நாடாளுமன்றத்தின் தேசிய பேரவை, செனட் சபைகளில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று (04) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த சட்டமூலத்திற்கு எதிராக 72 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

முதல் நாடாக பிரான்ஸ்
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பெருந்திரளான மக்கள் சட்டமூலத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக மாறியுள்ளது பிரான்ஸ்.

இமானுவேல் மேக்ரான் உறுதி
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு சட்ட உரிமையை அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2022இல் ரத்து செய்தது.

இதைத்தொடர்ந்து, பிரான்சில் கருக்கலைப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.