;
Athirady Tamil News

ரஷ்யா – உக்ரைன் போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்

0

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் போர்க்களத்தில் சிக்கித் தவிக்கும் 7 இந்திய இளைஞர்கள், சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரனைக்கு எதிராக ரஷ்யா போரை ஆரம்பித்து 2 வருடங்களை கடந்து விட்டுள்ள நிலையில் இந்த போரில் இந்தியர்கள் சிலர் பங்கெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்கள்
அத்தோடு, அவர்கள் கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் 7 இந்தியர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இந்த 7 பேரில் 5 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழப்பு
அதன்போது குறித்த இளைஞர்கள் பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இவ்வாறு ஏமாற்றி ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் உக்ரைன் எல்லையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.