;
Athirady Tamil News

இலங்கை வைத்தியத்துறையின் புதிய சாதனை: வெற்றிகரமாக நடந்த அரிய சத்திரசிகிச்சை

0

இலங்கை வைத்தியத்துறையில் புதிய சாதனை முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை போதனா வைத்தியசாலையில் வயோதிப பெண் ஒருவருக்கு இந்த மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அறுவைச்சிகிச்சையானது இன்று (11.3.2024) வெற்றிகரமாக இடம்பெற்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்தியர்
வெற்றிகரமாக இடம்பெற்ற சத்திரசிகிச்சை தொடர்பில் மேலும் தெரியவருகையில், 72 வயதான முத்துமெணிக்கே பல வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த பெண். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவரின் முதுகு வலி குணமாகவில்லை.

இந்த பெண்ணின் நிலையை துல்லியமாக கண்டறிந்த பதுளை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்தியர் டொக்டர் லக்மால் ஹேவகே, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார்.

இந்த சத்திர சிகிச்சையானது இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்படாத மிக அரிய வகை சத்திர சிகிச்சை என்பதும் விசேட அம்சமாகும்.

நோயாளி பூரண குணம்
எண்டோஸ்கோபிக் முறையில் முதுகுத்தண்டில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது.

ஏனெனில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வயது இல்லை, மேலும் மயக்க மருந்து இல்லாமல் குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி தற்போது பூரண குணமடைந்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.