;
Athirady Tamil News

கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் ஊழியரை கொலை செய்த தந்தை, மகன்

0

சென்னையில் உணவு பார்சல் வாங்கும்போது கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உணவு பார்சல்
சென்னை பம்மல் பகுதியில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் அருண்.

குறித்த உணவகத்திற்கு சங்கர் என்பவர் தனது மகன் அருண்குமாருடன் உணவு பார்சல் வாங்க வந்துள்ளார். அப்போது கூடுதலாக உணவிற்கு சாம்பார் கேட்டுள்ளனர்.

அதற்கு மேற்பார்வையாளர் அருண் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது.

தலையில் அடிபட்டு..
அப்போது அருண்குமாரும், சங்கரும் தாக்கியதில் அருண் கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சங்கர் மற்றும் அவருடைய மகன் அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூடுதல் சாம்பார் தர மறுத்த ஊழியர் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.