;
Athirady Tamil News

சீன உணவகத்தில் வெடி விபத்து: 2 பேர் பலி!

0

வடக்கு சீனாவின் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் பெய்ஜிங்கின் கிழக்கே ஹெபெய் மாகாணத்தில் சான்ஹே நகரின் குடியிருப்புப் பகுதியில் உள்ள உணவகத்தில் காலை 8 மணிக்கு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 26 பேர் காயமந்தடைந்தனர். உணவகம் முழுவதும் தீப்பரவியதில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் வாயு கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடர் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.