;
Athirady Tamil News

இந்த மாத இறுதிக்குள் இந்திய இலங்கை படகு சேவையை ஆரம்பிக்க திட்டம் !

0

இந்த மாத இறுதிக்குள் இரண்டு நாடுகளுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே இணைப்பை மேம்படுத்துவதையும், நெருக்கமான உறவுகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு அரசாங்கங்களும் கப்பல் திட்டத்தை விரைவாக செயல்படுத்த தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.

எனினும் விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்கள் தொடர்பாக ஏற்கனவே உள்ள சிக்கல் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே மானியங்களை வழங்குவது அவசியம் என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.