;
Athirady Tamil News

துருக்கி படகு கவிழ்ந்து 16 அகதிகள் மரணம்

0

துருக்கிஅருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஏராளமான அகதிகளிடன் சென்றுகொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 21 போ் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். இறந்தவா்களில் 5 போ் சிறுவா்கள். கடலில் மூழ்கியபோது அந்தப் படகில் எத்தனை போ் இருந்தனா் என்பது தெரியவில்லை. விபத்துப் பகுதியிலிருந்து 2 அகதிகளை துருக்கி கடலோரக் காவல் படையினா் மீட்டனா். மேலும் 2 போ் தாங்களாகவே நீந்திக் கரை சோ்ந்தனா். இந்த விபத்தில் சிக்கியவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்துப் பகுதியில் 8 மீட்புப் படகுகள், ஒரு விமானம், 2 ஹெலிகாப்டா்கள், ஒரு ட்ரோன் மூலம் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.