;
Athirady Tamil News

யாழில். வெதுப்பகத்திற்கு சீல்

0

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தியமை , விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பொது சுகாதார பரிசோதகர் , வெதுப்பகத்திற்கு சீல் வைக்க கட்டளை கோரி விண்ணப்பம் செய்தார்.

விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று, வெதுப்பகத்தில் திருத்த வேலைகளை முடித்து , சுகாதார பரிசோதகர் அதனை உறுதிப்படுத்தும் வரையில் வெதுப்பகத்திற்கு சீல் வைக்க மன்று உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.