;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

0

அரசாங்க ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை நாளையதினம் (08-04-2024) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இன்றையதினம் (07-04-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை “உயர்த்தப்பட்ட 10,000 ரூபாவுடன், நாளை 08 ஆம் திகதி முதல் நிறுவனங்களுக்கு பணம் விடுவிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.

மேலும் ” நாட்டில் உள்ள 28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கப்படும். இது உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.