;
Athirady Tamil News

சிரியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி 7 குழந்தைகள் பலி

0

தென்மேற்கு சிரியாவின்(Southwestern Syria) டரா மாகாணம் அருகே வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 7 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வீதியில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்த போது அங்கே வீதியோரத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதி
இந்த வெடிகுண்டு விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததோடு மேலும், 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.