;
Athirady Tamil News

Alexaவை பயன்படுத்தி குரங்கை விரட்டிய சிறுமிக்கு வேலை: உறுதியளித்த ஆனந்த் மஹிந்திரா

0

வீட்டுக்குள் நுழைந்த குரங்கை Alexa சாதனம் மூலம் விரட்டியடித்த உத்தர பிரதேச சிறுமிக்கு வேலை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா (13) என்கிற சிறுமி, சமையலறைக்குள் நுழைந்த குரங்கினை விரட்ட Alexa சாதனத்தைப் பயன்படுத்தியது பேசுபொருளானது.

சாதுர்யமாக செயல்பட்டு குரங்கிடம் இருந்து குழந்தையை காப்பாற்றிய சிறுமிக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா சிறுமி நிகிதாவுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது சகாப்தத்தின் மேலாதிக்க கேள்வி என்னவென்றால், நாம் அடிமைகளாகவோ அல்லது தொழில்நுட்பத்தின் எஜமானர்களாகவோ மாறுவோமா என்பது தான். இந்த சிறுமியின் கதை, தொழில்நுட்பம் எப்போதும் மனித புத்திசாலித்தனத்தை செயல்படுத்தும் என்று ஆறுதல் அளிக்கிறது.

அவருடைய விரைவான சிந்தனை அசாதாரணமானது. அவர் நிரூபித்தது முற்றிலும் கணிக்க முடியாத, உலகில் தலைமைத்துவத்திற்கான சாத்தியம். அவர் படிப்பை முடித்த பிறகு, அவர் எப்போதாவது கார்ப்பரேட் உலகில் வேலை செய்ய முடிவு செய்தால், நாங்கள் மஹிந்திராவில் எங்களுடன் சேர அவரை சம்மதிக்க வைக்க முடியும் என்று நம்புகிறோம்!!’ என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.