;
Athirady Tamil News

விடுமுறைகளை முன்னிட்டு விசேட தபால் சேவைகள்

0

சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த விடயத்தை தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொது விடுமுறை தினமான ஏப்ரல் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள பிரிவுகளைக் கொண்ட தபால்/துணை தபால் நிலையங்கள் மூலம் பண விநியோகம், வெளிநாட்டு கூரியர் சேவை மற்றும் பொது பார்சல் விநியோகம் ஆகியவற்றின் விசேட சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

நிவாரணம்
அதேவேளை, இலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு 27.5 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளது.

அதற்காக பிராந்திய அபிவிருத்திக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.