;
Athirady Tamil News

காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு – யாழில் துயரம்

0

காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த சிறிரங்கனாதன் மதுமிதா (வயது-16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அன்றிரவே அவர் உயிரிழந்துள்ளார்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்று மாதிரி இறப்பைக் கண்டறிவதற்காக கொழும்புக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.