;
Athirady Tamil News

போதைப்பொருளுடன் இலங்கை கடற்பரப்பில் இழுவை படகு பறிமுதல்

0

200 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் என்ற கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களுடன் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர், கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த படகு நாட்டின் தெற்கு கடற்கரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தப் போதைப் பொருளின் சந்தைப்பெறுமதி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பத்து பணியாளர்களும் கைது
இதன்போது படகில் இருந்த பத்து பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கடற்படைப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.