;
Athirady Tamil News

சவக்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானின் 450 கிலோ ஏவுகணை

0

வார இறுதியில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின்போது சவக்கடலில் விழுந்தநிலையில் 450 கிலோகிராம் எடையுள்ள ஈரானிய ஏவுகணையை இஸ்ரேல் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஏவுகணை இஸ்ரேலிய இராணுவ தளத்தில் மற்ற பலஸ்தீனிய கொடியுடன் கூடிய ரொக்கெட்டுகளுடன் காணப்படுகிறது.

இஸ்ரேல் மீது தாக்குதல்
சனிக்கிழமை இரவு, ஈரான் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பொலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.