;
Athirady Tamil News

2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இஞ்சி : தேசிக்காயின் விலையும் அதிகம்

0

கடந்த நாட்களுடன் ஒப்பிடும் போது மரக்கறிகளின் விலையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

எனினும், பேலியகொட வர்ததக நிலையங்களில் இன்றையதினம்(20) தேசிக்காய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ன.

இன்றைய விலை விபரம்
இதன்படி, தேசிக்காய் கிலோ ஒன்றின் விலை 1,000 ரூபாவாகவும், இஞ்சியின் விலை 2,800 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.

மேலும், தக்காளி கிலோ 80 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோவின் விலை 150 ரூபாவுக்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன் போஞ்சி ஒரு கிலோவின் விலை 300 ரூபாவாகவும், பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும், லீக்ஸ் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.