;
Athirady Tamil News

மட்டக்களப்பில் நடந்த கொடூரம் ; இரு வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குடும்பஸ்த்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும், மற்றையவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இருவரது சடலங்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணை
பிறைந்துறைச்சேனையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தினால் நெஞ்சுப் பகுதியில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 43 வயதான 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். தாக்குதலை மேற்கொண்டவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, வழக்கம் போல் முறுத்தானையில் உள்ள வெத்திலை போட்ட மடு குளப் பகுதியில் கட்டு வலை கட்டி மீன் பிடியில் ஈடுபட்டவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்தார்.

67 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணித்தார். மேற்படி இருவரது சடலங்களின் உடற் கூற்றாய்வினை சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம்.எம்.முஸ்தபா மேற்கொண்டிருந்தார். மரண விசாரணைகளை கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி அ.ரமேஸ்ஆனந் மேற்கொண்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.