;
Athirady Tamil News

இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள்!

0

இலங்கையில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்றையதினம் (30-04-2024) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா, டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியானது நாளை மாளிகாவத்தை P.D சிரிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தர்மர் சத்ய பிரகாஷ் மற்றும் வர்ஷா போன்ற இந்திய இசைக்கலைஞர்கள் இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.