;
Athirady Tamil News

யாழில் இராணுவத்தினரை கிண்டலடித்து காணொளி

0

யாழில் இளைஞர் ஒருவர்இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து கடமையில்
நின்ற இராணுவத்தினரை காணொளி எடுத்து கிண்டலடித்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞன் பலாலி வடக்குப் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து இராணுவ முகாமில் கடமையில் நின்ற இராணுவ வீரரை காணொளி எடுத்தது மட்டுமன்றி “டுப்பு டுப்புனு சுடுறீனங்களா? உண்மையான துவக்கா” என கிண்டலடித்துள்ளார்.

இவ்வாறு கடமையில் இருக்கும் ஒரு இராணுவத்தினரை காணொளி எடுத்து நக்கலடித்து அதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்தமை தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.