;
Athirady Tamil News

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

0

வாகன இறக்குமதி தொடர்பில் விசேட அறிக்கையொன்று தமக்கு விரைவில் கிடைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

விசேட அறிக்கை
அவர் மேலும் கூறுகையில், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலான விசேட அறிக்கையை வாகன இறக்குமதியாளர்கள் எனக்கு விரைவில் வழங்க உள்ளனர்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பிலான விரிவான தகவல்கள் அதில் உள்ளடக்கப்படும். இறக்குமதி துறை நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.