;
Athirady Tamil News

அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் சலுகைகள்! அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள நம்பிக்கை

0

அரச ஊழியர்களின் சேவைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்திற்கு பொறுப்பான உண்மையான அரச அதிகாரியின் பொறுப்பை அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த(Ashoka Priyantha) தெரிவித்துள்ளார்.

2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இல்லாமல் இந்த நியமனங்கள் உங்களுக்கு கிடைத்திருக்காது.

அரச துறையை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். சில நாசகார கும்பல்களும் குழுக்களும் அரச சேவையை அழிக்க தொடர்ந்து முயற்சி செய்கின்றன.

அரச நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை சிலர் மறந்து விடுகின்றனர். அரச அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு நிர்வாகத்தின் அரசாங்க கொள்கைகளை செயல்படுத்துவதாக இருக்க வேண்டும். குழப்பம் ஏற்படுத்துவது அரச ஊழியரின் வேலையல்ல.

அன்று வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தலைமைத்துவம் பங்காற்றியது.

அரச அதிகாரிகளாகிய நீங்கள் அவருடைய முறையான பொறிமுறையை கற்றுக்கொள்ள வேண்டும். அவர் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாவிட்டால் இந்த நாடு அழிந்திருக்கும். எனவே, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு உங்கள் ஆதரவு தேவை.

கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நாட்டின் சட்டம் வழங்கப்படக்கூடாது. இந்த நியமனங்களை பெறுவதில் நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

உங்கள் சேவைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்திற்கு பொறுப்பான உண்மையான அரச அதிகாரியின் பொறுப்பை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அரச நிர்வாகம், சட்டவாக்கத்தையும் நிர்வாகத்தையும் புறக்கணித்து பயணிக்க முடியாது. அழிவு அரசியலில் இருந்து அரசஅதிகாரிகள் விலகி இருக்க வேண்டும்.

அரச அதிகாரிகள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின்படி செயல்படக்கூடாது. அரச அதிகாரிகளாகிய நீங்கள் நிர்வாகத்தின் முடிவுகளைச் செயல்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.