;
Athirady Tamil News

யாழில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு!

0

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று (09/05) வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ-9 மற்றும் ஏ32 வீதிகளூடாக பயணித்த வாகனங்களை சோதனையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.