;
Athirady Tamil News

குளியாபிட்டிய இளைஞனின் கொலைச் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

0

குளியாபிட்டிய (kuliyapitiya) பகுதியில் கொலை செய்யப்பட்ட 31 வயதுடைய இளைஞனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை இரத்து செய்து குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

குறித்த இளைஞன் ஏப்ரல் 22ஆம் திகதி காணாமல் போன நிலையில் கடந்த 7ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

வழக்கு விசாரணை
இந்நிலையிலேயே, இக்கொலையின் பிரதான சந்தேக நபர்களான சிகிதி என்ற சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவி இன்று மீண்டும் குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, சந்தேகநபர்களின் பிணை இரத்து செய்யப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்துமாறும், 06ஆவது சந்தேகநபரை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஸ்தல பரிசோதனையை மேற்கொள்ளுவதற்காகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இளைஞனின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கமைய நேற்று உடற்கூற்று பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.