;
Athirady Tamil News

யாழிலுள்ள 126 வருடம் பழமையான வைத்தியசாலையில் புதிய மருத்துவ விடுதி!

0

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று (10) காலை திறந்து வைக்கப்பட்ட இந்த சிகிச்சை விடுதிகள் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியர் கெங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டவை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வானது சிறுவர்கள், குழந்தைகள் சத்திரசிகிச்சை நிபுணர் பா.சயந்தன் தலமையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

கட்டடத் தொகுதி
அதுமாத்திரமன்றி, யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்தார்.

இந்தக் கட்டடத் தொகுதியானது வைத்திய நிபுணர் பா.சயந்தன் மற்றும் அவரது துணைவியார் கிருபாளினி அவர்களது சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

வைத்திய நிபுணர்
இந்த நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், சத்திரசிகிச்சை பேராசிரியர் வைத்திய நிபுணர் எஸ்.ரவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக மகப்பேற்று வைத்திய நிபுணர்களான ஜெ.கஜேந்திரன், என்.சரவணபவன், வை.சிவாகரன், ஆர்.துவாரதீபன் ஆகியோரும், விஷேட அதிதியாக இலங்கை நிர்வாக சேவையின் உயரதிகாரி பொ.பிறேமினியும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.