;
Athirady Tamil News

சகுனம் சரியில்லை… தேர்தல் அறிவிப்பின்போது சதி செய்த வானிலை: கேலி கிண்டலுக்காளான பிரித்தானிய பிரதமர்

0

பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

ஆனால், அந்த அறிவிப்பின்போது மழை கொட்டித்தீர்த்ததால், பிரதமர் மழையில் நனைந்துகொண்டே பேசும் காட்சிகள் கேலி கிண்டலுக்கு வழிவகை செய்துவிட்டன.

சகுனம் சரியில்லை
பிரிதமர் ரிஷி மழையில் நனைந்துகொண்டே பேசும் காட்சிகளை மீம்களாக்கி கேலியும் கிண்டலும் செய்துவருகிறார்கள் மக்கள். சகுனம் சரியில்லை, பிரித்தானிய வானிலையே ரிஷியை கிளம்பச் சொல்கிறது போல இருக்கிறது என்று கூறியுள்ளார் ஒருவர்.

மற்றொருவர், லேபர் கட்சியிடம் நாட்டை ஆள எந்த திட்டமும் இல்லை என்கிறார் ரிஷி, ஆனால், இவர் வானிலை முன்னெச்சரிக்கையைக் கூட கவனிக்கவில்லை என்கிறார்.

ஆக மொத்தத்தில், நாட்டின் மிக முக்கிய அறிவிப்பு கேலிகும் கிண்டலுக்கும் ஆளாகிவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.