;
Athirady Tamil News

யாழில். பனைமரம் முறிந்து விழுந்து வீடொன்று சேதம்

0

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்தமையால் , வீட்டின் ஓடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய காற்றின் காரணமாகவே வீட்டு வளவினுள் நின்ற பனை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

அதேவேளை நேற்றைய தினம் வீசிய காற்றின் காரணமாக கொக்குவில் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.